Sunday 5th of May 2024 10:03:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா 3வது அலை அச்சுறுத்தல்: பல்கலைக் கழகங்களை மீளவும் ஆரம்பிக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது!

கொரோனா 3வது அலை அச்சுறுத்தல்: பல்கலைக் கழகங்களை மீளவும் ஆரம்பிக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது!


இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்றுப் பரம்பல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் பல்கலைக் கழகங்களை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதி திறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE